×

மக்களவைத் தேர்தலில் போட்டியிட விரும்புவர்களுக்கான விண்ணப்பங்கள் வரும் 19ம் தேதி முதல் விநியோகிக்கப்படும் : திமுக தலைமை அறிவிப்பு

சென்னை : திமுக சார்பில் போட்டியிட விரும்புவர்களுக்கான விண்ணப்பங்கள் வரும் 19ம் தேதி முதல் விநியோகிக்கப்படும் என்று திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.இது தொடர்பாக திமுக பொதுச்செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நடைபெறவிருக்கும் நாடாளுமன்றப் பொதுத்தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வேட்பாளராக போட்டியிட விரும்புவோருக்கான விண்ணப்பப் படிவங்கள் வருகிற 19-2-2024 முதல் அண்ணா அறிவாலயத்திலுள்ள தலைமைக் கழகத்தில் கிடைக்கும்.

போட்டியிட விரும்புகின்ற கழகத் தோழர்கள் விண்ணப்பத்தை முறையாக பூர்த்தி செய்து, 1-3-2024 முதல் 7-3-2024 மாலை 6 மணிக்குள் தலைமைக் கழகத்தில் சேர்ப்பித்திட வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். வேட்பாளர் விண்ணப்பக் கட்டணம் – ரூ.50,000/- (விண்ணப்ப படிவத்தை தலைமைக் கழகத்தில் ரூ.2,000/-வீதம் செலுத்தி பெற்றுக் கொள்ளலாம்.) என்று குறிப்பிட்டுள்ளார்.

The post மக்களவைத் தேர்தலில் போட்டியிட விரும்புவர்களுக்கான விண்ணப்பங்கள் வரும் 19ம் தேதி முதல் விநியோகிக்கப்படும் : திமுக தலைமை அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Lok Sabha ,DMK ,Chennai ,general secretary ,Duraimurugan ,Dravida Munnetra Kazhagam ,Dinakaran ,
× RELATED மக்களவை தேர்தலை பார்க்க 23 நாடு பிரதிநிதிகள் வருகை